பிராந்திய சுகாதார பணிமனையினால் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொது மக்களுக்கு தேவையான சிறப்பான  சுகாதார மேம்பாட்டு நலசெய்திகளை வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  ஊடகவியலாளர்கள் இன்று மட்டக்களப்பில் கௌரவிக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுகாதார சேவைகள் தொடர்பான விடயங்களை ஊடகவியலாளர்கள் மத்தியில் தெளிவூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (22) திகதி

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில்  இடம்பெற்றதன்போதே ஊடகவியலாளர்களுக்கு நற்சான்றுப் பத்திரம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் விசேட சுகாதார சேவைகள் சம்பந்தமாகவும் கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டங்கள் சம்பந்தமாகவும் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக ஊடகத்துறையினருக்கு இதன் போது தொளிவுபடுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் மக்கள் பக்கமிருந்து சுகாதார துறை சார்ந்து தெரிவிக்கப்படும் விடையங்களை இதன் போது தெரிவித்திருந்தனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவைகள் பணிமனையின் உயரதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும்  கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

















Powered by Blogger.