இயேசு கிறிஸ்து மனித மீட்பிற்காக சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்று பெரிய வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
இயேசு துன்பங்களை அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசுக்கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று (18.04.2024) மட்டக்களப்பு - புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜோர்ச் ஜீவராச் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றன.
அந்த வகையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் தத்துறூபமான முறையில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.