இளம் ஊடகவியலாளர்களால் வாகன சாரதிகளுக்கான விழிப்புணர்வு வீதிப்பலகை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள இளம் ஊடகவியலாளர்களினால் வீதி விபத்தை தடுக்கும் வகையில் சாரதிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடிய வீதி விளம்பர பலகை மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களால் மேலும் பல சமூக நோக்கு மிக்க திட்டங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் போது தெரிவித்துள்ளனர்.