மட்டக்களப்பு நீதிமன்றை வெடி குண்டுவைத்து தகர்கப் போவதாக இரவில் தொலைபேசி அழைப்பு கட்டிடத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு!!

பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் இன்றைய நீதிமன்ற வழக்குகளுக்கு வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் விசேட மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற வளாகம் முற்றாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

நீதிமன்றத்தில் கடமையாற்றும் ஊழியர்களும் உள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. சகல பரிசோதனைகளும் நிறைவடைந்த பின்னர் வெள்ளிக்கிழமை மதியம் 11 மணிக்கு பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொலிசார் ஆயத்தங்களை மேற்கொண்டனர்.








Powered by Blogger.