தமிழ் தேசிய உணர்வோடு பயணிப்போருக்கு கட்சிகள் உரிய இடம் வழங்குவதில்லை - வேட்பாளர் எஸ் சிவதர்ஷன்

சிங்கள மக்கள் புதிதாக ஒரு மாற்றத்தை வேண்டி தீர்மானி த்து தெரிவு செய்த புதிய ஜனாதிபதியே அனுரகுமார திசாநாயக்க. தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியானது  உண்மையான உணர்வுடனும் இருந்திருந்தால் சுயேச்சை குழு தலைவர்களை அழைத்து பேசி அவர்களை உள்வாங்கி தமிழர்களது வாக்குகளை சிதைவடையாமல் தமிழரின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றி இருக்க முடியும் என மட்டக்களப்பில் தேர்தலில் சுயேட்சைக் குழு - 4 இல் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சிவதர்ஷன்  தெரிவித்துள்ளார்.



புதிதாக தெரிவு செய்யப் பட்டுள்ள ஜனாதிபதி முதல் அனைத்து ஜானாதிபதிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கதைத்து ஒற்றுமை ஏற்படுத்தி ஒரு தீர்வை தருவதாக ஏமாற்றி வந்தனரே தவிர, அந்தத் தீர்வை பெற்றுத்தர வேறு எவரும் முன்வரவில்லை. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாம்  பாராளுமன்றம் சென்று பணியாற்றி வரும்போது அந்தக் கட்சிகளுக்குள் இருந்து சில துரோகிகள் அவர்களுக்குத் தேவையானவர்களை மட்டும் பலர் ஆளாக்கியுள்ளனர்.

தமிழ் தேசிய உணர்வோடு பயணிப்போருக்கு சகல கட்சிகளும் உரிய இடத்தினை வழங்கவில்லை என்ற காரணமாகவே நாங்கள் தற்போது சுயேட்சையாக தேர்தலில் களமிறங்கி யுள்ளோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியானது தமிழர்களுக்கு ஒரு முதன்மையான கட்சியாக இருந்திருந்தால் உண்மையான உணர்வுடனும்  ஒற்றுமையுடனும் களம் இறங்கியுள்ள சுயேச்சை குழு தலைவர்களை அழைத்து பேசி அவர்களை உள்வாங்கி தமிழர்களது வாக்குகளை சிதைவடையாமல் தமிழரின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றி இருக்க முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை க்குழு 4 இலக்கம்   தையல் மெஷின் சின்னத்தில் போட்டியிடும் எஸ் . சிவதர்ஷன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதன் போது சுயேட்சைக்குழுவின் தலைமை வேட்பாளர் ச.அருள்தாஸ் உள்ளிட்ட எட்டு வேட்பாளர்களும் கலந்து கொண்டு தம்மைப் பற்றிய அறிமுகத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.