உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு!!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (18) மாலை கல்லடியில் இடம்பெற்றது.

கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவர் கணேசமூர்த்தி லோகநாத குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இறுதிப் போரில் உயிர்நீத்த  உறவுகளை நினைத்து அஞ்சலி செலுத்தி உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டதுடன், உப்பு இல்லா சஞ்சும் பரிமாறப்பட்டது.

இதன்போது கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.





















Powered by Blogger.