மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!!


"மகளிர் மனை மேம்பாட்டு வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வு" மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் "அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் இவ்வருடம்  கொண்டாடப்படும் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர்  திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின்  வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் வரிசையில் இரண்டாம் நிகழ்வாக மகளிருக்கான வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வானது

உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் அவர்களின் தலைமையின் கீழ் (2024.03.07) திகதி கல்லாறு மற்றும் மாங்காடு சமுர்த்தி வங்கிகளில் இடம்பெற்றது. 

கல்லாறு சமுர்த்தி வங்கியில் இடம்பெற்ற நிகழ்வின் போது கல்லாறு சமுர்த்தி வலயத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 08 பயனாளிகளுக்கு சுமார் 1400000/-  சுயதொழில் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டது.

மாங்காடு சமுர்த்தி வங்கியினால் தெரிவுசெய்யப்பட்ட  2 பயனாளிகளுக்கு  அருணலு கடன் வழங்கப்பட்டதுடன் 17 பயனாளிகளுக்கு சுமார் 1495000/- பெறுமதியான  வாழ்வாதார கடனும் வழங்கப்பட்டது.

மேலும் மாங்காடு சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களால் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில்  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார், திட்ட முகாமையாளர் திருமதி விமலா ஜோகேந்திரன், சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ. உதயசுதன் மற்றும்  வங்கிகளின் முகாமையாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.










Powered by Blogger.