கிழக்கு மாகாணத்தில் மீன்பிடி மற்றும் இறால் வளர்ப்பு ஆகிய தொழில்களை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதனடிப்படையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் பட்டிப்பளையில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கான குறித்த அனுமதி பத்திரங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.