சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் உதவி செயலாளராக சுப்ரமணியம் கரன் பதவியேற்பு!!


கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் உதவி செயலாளராக  நியமிக்கப்பட்டிருக்கும் சுப்ரமணியம் கரன் அவர்கள் கடந்த (22) திகதி தனது கடமையினை திருகோணமலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த அவர் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவம், சமூக சேவை மற்றும் நன்னடத்தை அமைச்சின் உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுப்ரமணியம் கரன் அவர்கள் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதுடன் கடந்த காலங்களில் மட்டக்களப்பு வாகரை மற்றும் ஆலையடிவேம்பு உள்ளிட்ட பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றியதுடன்,  இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.