களுவாஞ்சிகுடியில் சர்வதேச கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் வாரம்


சர்வதேச கரையோர பாதுகாப்பு  மற்றும் தூய்மைப்படுத்தல் வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி  பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு  செய்யப்பட்ட நிகழ்வு  பெரியகல்லாறு மற்றும் களுவாஞ்சிகுடி கிராம சேவகர் பிரிவுகளில்  பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னமின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ்  இன்று (19) இடம்பெற்றது.

இந் நிகழ்ச்சித்திட்டம்   கிழக்கு மாகாண ஆளுனர்  செந்தில் தொண்டமானின்  பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் கிழக்கு கரையோரங்களை தூய்மையாகப்  பேணுதல் எனும் திட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிரதேச மக்களுடன் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,  கடல் சார் சூழல் அதிகார சபை மற்றும்  பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின்  பங்குபற்றுதலுடன் கரையோரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

இவ்வாறு கரையோரங்களை சுத்தம் செய்யும் பணிகளை  பிரதேச செயலக கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான யோ. நிசந்தராசன் மற்றும் ஆ. ஜெகரூபன் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பு செய்தனர்.





Powered by Blogger.