களுவாஞ்சிகுடியில் தொழிற்சந்தை!!


மனிதவலு வேலை வாய்ப்பு திணைக்களம்  மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துடன்  இணைந்து ஏற்பாடு செய்த  தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வு  பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் களுதாவளை கலாசார மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்றது.

இதன்போது அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி, தனியார் தொழில் வழங்கல் ஆகிய முப்பதிற்கும் அதிகமான  நிறுவனங்கள்  கலந்துகொண்டதுடன், தமது  சேவைகள்  தொடர்பாக  இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தியதுடன்  தொழிற்சந்தை  மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் குறித்த  ஆலோசனைகளையும் வழங்கினர்.

பிரதேச செயலக மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர்களான க. ரவீந்திரன் மற்றும் தெ.ராகவன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இத்தொழிற்சந்தை  மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிகழ்வில் சுமார் 500 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த.  நிர்மல்ராஜ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  என  பலரும்   பங்கேற்றனர்.










Powered by Blogger.