சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் ; சாணக்கியன் குற்றச்சாட்டு!


“சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாக தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்த விடயங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் டெங்கு ஒழிப்பு உதவியாளரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றனர்

பேராதனை வைத்தியசாலை இலங்கையில் இருக்கும் 2 வது வைத்தியசாலையாகும். அந்த வைத்தியசாலையில் 10 எம்.எம் ஊசி இல்லை என்றால் எமது கிராமப்புற வைத்தியசாலைகளில் அந்த ஊசி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

அமைச்சரின் ஊழலால் நாற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த டெங்கு ஊழியர்கள்; மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஜனாதிபதி பிரதமராக இருந்த காலப்பகுதியில் தான் இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

அவர் இன்று மொட்டுகட்சியின் அரசியல் கைதியாக இருந்தாலும் கூட நீதியை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு பொறுப்பு இருக்கின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Powered by Blogger.