இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் - ஆபத்தான நிலையில் ஐந்தாவது நபர்






இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





அவர்களில் நால்வர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், ஒருவர் வெலிகந்த வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.







நேற்றைய தினம் வரையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு 9 மணிக்குள் புதிதாக நான்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.





இலங்கையில் இதுவரையில் 6 பேர் முழுமையாக குணமடைந்து வீடு நோக்கி சென்றுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





இதேவேளை, கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அரச வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.





கொரோனா நோய் அறிகுறிகளுடன் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்ற இரண்டு நோயாளிகள் தொடர்பில் நேற்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Powered by Blogger.