கல்முனை பிரதேச செயலக விடயத்தில் நல்ல செய்தி ஒன்றை எதிர்பாருங்கள் - கருணா






கல்முனை வடக்கு உப
பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில் நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளதாக
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா
அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.







கல்முனை உப பிரதேச் செயலக முன்றலில் புதன்கிழமை (5) இரவு 10 மணியளவில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்
எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் தனது கருத்தில்


கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில்
நான் தீவிரமாக செயற்பட்டு வருகின்றேன். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மஹிந்த
ராஜபக்ஷ அவர்களை சந்தித்து இதை உடனே தரம் உயர்த்தி தரவேண்டும் என்று அழுத்தமாகக்
கூறினேன். இதிலேயே ஒரு நற்செய்தி ஒன்று வந்திருக்கின்றது நாளை(வியாழக்கிழமை (
6)) காலை( இன்று) பாராளுமன்ற குழு கூட்டம் இடம்பெற இருக்கின்றது. இதற்கு
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளரும்
அழைக்கப்பட்டிருக்கிறார்கள் இதில் அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்று
அவர்களிடமும் நான் தெளிவாக கூறி இருந்தேன். நாளைய கூட்டத்தின் பின்னர் கல்முனை
வடக்கு உப பிரதேச செயலக இதயம் சம்பந்தமான வெளிப்படைத்தன்மை தெரியவரும் அதற்கான
முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. நான் பிரதம மந்திரியிடம் தெளிவாக கூற
இருக்கிறேன். நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
அப்போதுதான் மக்கள் எங்களை மதிப்பார்கள் .ஆகவே அந்த விடயம் இடம்பெறுவதற்கான
சாத்தியக் கூறுகள் கூடுதலாக உள்ளது. அதற்காகத்தான் அவர்கள்
அழைக்கப்பட்டிருக்கிறார்கள் .ஆகவே இது ஒரு சிறந்த நற்செய்தியாக நாங்கள்
பார்க்கிறோம் என குறிப்பிட்டார்.







Powered by Blogger.