பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்



தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் 50 ஆயிரம் பேருக்கு பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் மாவட்டச் செயலாளர்களால் பயிலுநர் நியமனக் கடிதம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.






இதுதொடர்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;


தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் பட்டத்திற்கு சமமான தகுதியான பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தகுதியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேரை அரச சேவையில் ஈடுபடுத்துவதற்காக அமைச்சரவையினால் தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




இதற்கமைவாக இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் கண்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


• பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கும் டிப்ளோமாதாரிகளுக்கும் பயிற்சியளாருக்கான நியமன கடிதத்தை வழங்குதல் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களால் மேற்கொள்ளுதல்.


• இந்த பயிற்சியாளர்கள் பயிற்சி கால வரையறுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்களுக்குள் இணைக்கப்பட்டு பயிற்சியை வழங்குதல்.


• ஒரு வருடம் திருப்தியான பயிற்சி காலத்தின் இறுதியில் இவர்கள் பணியாற்ற விருப்பத்தை தெரிவித்துள்ள கிராமிய பிரதேசத்தில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அரச சேவைக்கு உட்பட்ட நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளுதல்- என்றுள்ளது.


Powered by Blogger.