கோட்டாபயவின் கடுமையான உத்தரவு! வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு



வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக கூறி இளைஞர், யுவதிகளை ஏமாற்றி அவர்களின் பணங்களை கொள்ளையடிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.


அண்மைக்காலங்களாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களினால் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.


அதேபோன்று, வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அங்கே கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதிக்குள்ளாகி, இலங்கை தூதுவரலாயங்களை நாடி, மீண்டும் நாடு திரும்பி வருகின்றமையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.


இந்நிலையில், போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.




ஜனாதிபதி உத்தரவுக்கு அமைய, நாடு முழுவதும் செயற்படும் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


போலி ஆவணங்கள் சமர்ப்பித்தல் மற்றும் வயது குறைந்தவர்களை வெளிநாட்டு தொழிலுக்கு ஈடுபடுத்தல் ஆகிய விடயங்களுக்கு உதவும் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை சுற்றிவளைத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் இடம்பெறும் பல்வேறு முறைக்கேடுகள் தொடர்பில் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.


கண்காணிப்பு நடவடிக்கையில் 17 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 36 பேர் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, இனிவரும் காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் இளைஞர் யுவதிகள் அங்கரிக்கப்பட்ட முகவர்களின் மூலம் தமது முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Powered by Blogger.