திட்டமிடல் அதிகாரி தலைமையில் பாரிய நிதி மோசடி நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் வேண்டுகோள்



கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முறாவோடை திருவள்ளுவர் வீட்டுத்திட்டத்தில் திட்டமிடல் அதிகாரி தலைமையில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.










சுமார் 30 குடும்பங்களிடம் 5000 ரூபாய் வீதம் திட்டமிடல் அதிகாரி தலைமையில் சிலை வைப்பதாக கூறி இப் பண அறவீடு இடம்பெற்றுள்ளதாக அறிய கிடைக்கிறது





இதனால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் ஒரு வருடம் கடந்த நிலையிலும் எவ்வாறு முறைப்பாடு செய்வதென்று அறியாது அல்லலாய்க்கின்றனர்.





உரிய அதிகாரிக்ககு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகின்றனர். இவ் வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது..


Powered by Blogger.